Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தோளூர்பட்டி கொங்குநாடு கல்வியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

செப்டம்பர் 27, 2023 11:20

நாமக்கல்: தோளூர்பட்டி கொங்குநாடு கல்வியியல் கல்லூரியில்  நலப்பணித்திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள்  நடும் விழா நடைபெற்றது.

நாமக்கல், திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டியில், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி, கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்குநாடு கல்வியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இங்குள்ள கொங்குநாடு கல்வியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித்திட்ட தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.எஸ்.கே.பெரியசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு விழாவைத் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் நாகராஜன் முன்னிலை வகித்து மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நாட்டு நலப்பணித்திட்ட தின விழாவின் சிறப்புகள் குறித்து பேசினார்.

 நாட்டு நலப்பணித்திட்ட தின விழாவை முன்னிட்டு, இரண்டாம் ஆண்டு பயிற்சி ஆசிரியர்கள் மூலம், 21 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தøமையில் 250 மரக்கன்றுகள் நடும் விழ சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்